உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

பண்ருட்டி நகராட்சியில் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தும் தொடரும் விற்பனை

பண்ருட்டி:

           பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.

             பண்ருட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் தடை செய்து தீர்மானம் (தீர்மானம் எண்.299) நிறைவேற்றப் பட்டது.

            அதன்படி கடந்த ஏப்ரல் 15ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மறுசுழற் சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, தெர்மா கூல் பிளேட்டுகள் ஆகியவை விற்பதற்கும், உபயோகப்படுத்துவதை ஜூன் 15ம் தேதிக்குள் நிறுத்திகொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்தார். மேலும் கால அவகாசத் திற்குப் பின் விற்பனை செய்யும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், மீறி விற்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பது என நகராட்சி அறிவித்தது. ஆனால் அறிவிப்பிற்குப் பின் பெயரளவிற்கு பள்ளி மாணவ, மாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டும் நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுகிறதா? தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டு கொள்ளவில்லை.

             இதனால் பண்ருட்டி நகரில் டாஸ்மாக் கடைகள், டீ கடை, ஓட்டல்கள், இரவு நேர தள்ளுவண்டி கடைகள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தண்ணீர்,டீ கப், தெர்மாகூல் பிளேட்டுகள், பிளாஸ் டிக் கவர் உபயோகம் மீண்டும் அதிகரித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வதாக கூறி கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி விளம்பரம் உள்ளிட்ட செலவுகளை செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை தான் நகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் வீணடித்து வருகின்றனர். நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior