உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

திட்டக்குடியில் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ஆர்ப்பாட்டம் ரத்து


திட்டக்குடி:

            திட்டக்குடியில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வருகையின் போது வாசன் கோஷ்டியினரை கண்டித்து சிதம்பரம் கோஷ்டியினர் நடத்த இருந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ரத்தானது.
 
             திட்டக்குடி பகுதியில் இளைஞர் காங்கிரசில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன் கோஷ்டியினர் என தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறிஞ் சிப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர் காங்., மாநிலத் தலைவர் யுவராஜ் ராமநத்தம், திட்டக் குடி, விருத்தாசலம் வழியாக செல்வதாக இருந்தது. அப்போது திட்டக்குடி எல்லையான இளமங்கலத்தில் கொடியேற்றம் மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு வாசன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

             இதனையறிந்த சிதம்பரம் ஆதரவாளர்கள் மாநிலத் தலைவர் வருகையை தங்களுக்கு தெரிவிக்கவில்லை. தன்னிச்சையாக வாசன் ஆதரவாளர்கள் செயல்படுவதை கண்டித்து மாநிலத் தலைவர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். நேற்று காலை இளைஞர் காங்., மாநிலத் தலைவரை வரவேற்க வாசன் கோஷ்டியினரும், கருப்புக் கொடிகாட்ட சிதம்பரம் கோஷ்டியினரும் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

            இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து மாநிலத் தலைவருக்கு வாசன் கோஷ்டியினர் இள மங்கலத்திலும், சிதம்பரம் கோஷ்டியினர் திட்டக்குடி பஸ் நிலையத்திலும் வரவேற்பு அளித்தனர். மேலும் இளமங்கலத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior