உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிறுபாக்கம், வேப்பூர் விவசாயிகள் மஞ்சள் விளைவிப்பதில் ஆர்வம்


சிறுபாக்கம்:

           வேப்பூர், சிறுபாக்கம் விவசாயிகள் போதிய விலை கிடைக்கும் மஞ்சள் பயிரை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

           வேப்பூர், சிறுபாக்கம் உட்பட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பண தேவைகளுக்காக நீர்ப்பாசன நிலங்களில் ஒரு ஏக் கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மஞ்சள் பயிர்களான சேலம் 1, ஈரோடு 2, பனங் காளி, எருமதாளி, நுர ஆகிய மஞ்சள் ரக பயிர்களை விளைவித்து வந்தனர்.கடந்த ஆண்டு ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் மார்க்கெட்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு குவிண்டால் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை நல்ல விலைக்கு எடுக்கப்பட்டது. 

               கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குவிண்டாலுக்கு 16 ஆயிரம் வரை மஞ்சளுக்கு விலை வழங்கப்பட்டு வருகிறது.இதனால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மஞ்சள் விளைவித்த 30 சதவீத விவசாயிகளை தொடர்ந்து தற்போது 90 சதவீத விவசாயிகள் மஞ்சள் பயிர் விளைவிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior