உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணிகளால் பாதிப்பு

திட்டக்குடி:

              பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணியால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க மேம்பாலம் பணி முடியும் வரை மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
              விருத்தாசலம் - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையின் மையத்தில் பெண்ணாடம், திட்டக்குடி அமைந்துள்ளது. இவ் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள், லாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், சிமென்ட், சர்க்கரை ஆலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங் கள் சென்று வருகின்றன. தவிர விருத்தாசலம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.இதனால் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

           இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இப்பணிக்காக இறையூர், பெ.பொன்னேரி, அம் பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் இருந்த வீடுகள், மரங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மாற்று இடமும் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டது.
 
             மேம்பாலம் பணிகள் துவங்கிய நிலையில் சாலையின் இருபுறமும் கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட் டுள்ள ராட்சத இரும்பு பொருட்கள், பில்லர் அமைக்கத் தோண்டிய பள் ளங்களில் இருந்து வெளியேற்றிய மண் குவியல் களால் வாகனங்கள் அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் திணறுகின்றன. ரயில்வே கேட் மூடும் போது இருபுறமும் கேட் டில் அணிவகுத்து நிற் கும் வாகனங்கள் முன்னால் நிற் கும் வாகனங்களை முந்திச் செல்வதில் போட்டா போட்டி ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களால் வாகனங் கள் செல்லும் போது உடல் நலம் பாதிப்பிற்குள்ளாகும் வகையில் புழுதிப் புயல் உருவாகிறது.
 
             கட்டுமான பணி துவங்கும் முன்பாக இறையூர் கைகாட்டி, கொத் தட்டை சாலை வழியாக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்திற்குள் வந்து விருத்தாசலம் செல்ல ஒரு வழியும், கட்டுமான பணி நடைபெறும் பகுதியை ஒட்டியே ஒரு வழி என இருவழியாக வாகனங்கள் இடையூறின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பணிகள் துவங்கி பல மாதங்களாகியும் இதுவரை மாற்று வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

                  அதிகாரிகள் விரைந்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ள மாற்று வழிச் சாலைகள் கிராமப்புற மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள். இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே மாற்று வழி ஏற்படுத்தும் முன் கிராமப்புற சாலைகளில் பேட்ஜ் ஒர்க் அமைத்து வாகனங்கள் எளிதில் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட வேண்டும்.

                    இது குறித்து மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளும் பரிசீலனை செய்து போர்க்கால அடிப்படையில் மேம்பாலம் பணி முடியும் வரை மாற்று சாலையை ஏற்படுத்தித் தர நடவடிக்கை வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior