உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

பண்ருட்டி வட்டாரத்தில் முந்திரி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: அரசு மானியம்


பண்ருட்டி:
 
          முந்திரி சாகுபடியில் குறைந்த செலவில், அதிக மகசூல் மற்றும் லாபம் பெற அரசு மானியத்துடன், புதிய தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
 
           தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி பண்ருட்டிக்கு அதிக அளவில் அந்நிய செலவாணியை ஈட்டிக்கொடுத்து, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. தற்போது முந்திரி சராசரி மகசூல் ஹெக்டருக்கு 700 கிலோ என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. முந்திரியில் ஹெக்டருக்கு 2000 கிலோ மகசூல் எடுக்க கீழ்க்கண்ட புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும்.
 
          ஒட்டு முந்திரி கன்றுகளை (வி.ஆர்.ஐ.3), 5மீ ல 4மீ இடைவெளியில் ஹெக்டருக்கு 500 கன்றுகள் வீதம், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடவு செய்ய வேண்டும். நடவு குழியில் மேல் மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழு உரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து குழியை நிரப்ப வேண்டும். 3 முதல் 6 மாதம் வயதுள்ள கன்றுகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். நடவின் போது ஒட்டு கட்டியப் பகுதி தரைமட்டத்தில் இருந்து 5 செமீ மேலேயும், அப்பகுதி உடையாமலும், நேராகவும் வளர திடமான ஊன்று குச்சிகளை நட்டு கயிற்றால் கட்ட வேண்டும். 
 
            பண்ருட்டி வட்டாரத்தில் புதிய பரப்பில் ஒட்டு முந்திரி பயிர் செய்தால் ஹெக்டருக்கு முதல் வருடம் ரூ.19,710-க்கு தோட்டக்கலை பண்ணையில் இருந்து முந்திரி செடிகளும், தமிழ்நாடு அரசு டான்கோப் மூலம் இடுபொருள்கள், நடவு மற்றும் பராமரிப்பு செலவும் வழங்கப்படும். மேற்கண்ட முறையில் முந்திரி நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள வேளாண்மைத் துறை வளாகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தேவை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்து பயனடையும்படி வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior