உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் ஆதரவு


நெய்வேலி: 

           என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டளித்துள்ளனர்.

          என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 7ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையப் பகுதிகளில் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியமா அல்லது வேண்டாமா என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஓட்டெடுப்பு நடத்தினர். இதில் பெரும்பாலானோர், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து ஓட்டளித்தனர். 

             இதன் எதிரொலியாக, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது குறித்தும், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது குறித்தும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகக் குழுவைக் கூட்டி முடிவெடுக்க உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior