உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

கார் மீது பைக் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்

கடலூர் :

                    கார் மீது பைக் மோதியதில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர். சிதம்பரம் ராஜாமுத் தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் சத்தியநாராயணன் ஸ்ரா(55). இவர் நேற்று முன்தினம் இரவு காரில் (பி.ஒய்-01-ஏ.ஜே-1407) சிதம்பரத்திலிருந்து அண் ணாமலை பல்கலை கழக துணைவேந்தர் பங்களா அருகே வலது புறமாக வந்து திரும்பினார். அப் போது எதிரே வந்த மோட் டார் சைக்கிள் (பி.ஒய்-01-ஆர்.கியூ-2643) கார் மீது மோதியது.

                   இந்த விபத்தில் மோட் டார் சைக்கிளில் வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அருண்குமார் சிங்(20), பிரேம்குமார் சிங்(19) இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior