உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

வாலிபர் சங்கத்தினர் 96 பேர் கைது

விருத்தாசலம் :

                      விருத்தாசலம் அருகே தடையை மீறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் நூலகம் அருகில் அரசின் அனுமதியின்றி கடந்தாண்டு அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

                              இதனால் அப்பகுதியில் உள்ள இரு தரப்பினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழ் வெண்மணி நினைவு தினமான நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அப்பகுதி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதற்கு மற் றொரு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தாசில் தார் பூபதி தலைமையில் நடந்த சமாதானக் கூட்டம் தால்வியடைந்தது. இதனால் திட்டமிட்டபடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர்.இதனால் நேற்று காலை பழையபட்டினம் கிராமத்தில் கூடுதல் எஸ்.பி., சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாசில் தார் பூபதி, ஆர்.ஐ., முரளி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி வாலிபர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணா, துணை செயலாளர் வாஞ் சிநாதன் உள்ளிட்ட 96 பேர் பகல் 12.45 மணி அளவில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காலனி வழியாக ஊர்வலமாக சென் றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior