உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

கிணற்றில் வாலிபர் சடலம்

நெய்வேலி: 

                            குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்திநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயத் தொழிலாளி. இவரது மகன் அருள்ஜோதி (26). இவர்அதே பகுதியில் உள்ள தோல் பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  கடந்த 22ம் தேதி மதியஉணவுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டுக்கு சென்றவர் அவர் திரும்பவில்லை. இது குறித்து நிறுவன மேலாளர் அவரது வீட்டுக்கு தகவல் கொடுத்தார்.  இதை யடுத்து அவரது தந்தை ராமலிங்கம் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை அவரது உடல் குறிஞ்சிப்பாடி ரயில்நிலை யம் அருகே உள்ள கிணற் றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்துக்கு சென்ற குறிஞ்சிப்பாடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிணமாக கிடந்த அருள் ஜோதி அடித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior