உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

30 குழந்​தை​க​ளுக்கு ​ காப்​பீட்டுத் திட்ட அடை​யாள அட்டை

 பண்​ருட்டி: ​ 

                  மன வளர்ச்​சிக் குறை​பாடு உடைய குழந்​தை​க​ளுக்கு இல​வச மருத்​துவ காப்​பீட்​டுத் திட்ட அடை​யாள அட்டை வழங்​கும் விழா,​​ பண்​ருட்டி வட்​டம் ​ பூங்​கு​ணம் வட்​டார வள மைய வளா​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்​றது.​  ÷இவ் விழா​வில் கட​லூர் ஓயா​சீஸ் தன்​னார்வ தொண்டு நிறு​வ​னத்​தின் ஒத்​து​ழைப்​போடு,​​ மைய அர​சின் தேசிய அறக்​கட்​டளை மூலம் மன வளர்ச்​சிக் குறை​பாடு,​​ மூளை முடக்கு வாதம் உள்​ளிட்ட நோயால் பாதிக்​கப்​பட்ட 30 குழந்​தை​கக​ளுக்கு தலா ரூ.2 லட்​சம் மதிப்​பு​டைய இல​வச மருத்​து​வக் காப்​பீட்டு திட்​டத்​துக்​கான அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டன.​  வட்​டார வள​மைய மேற்​பார்​வை​யா​ளர் தங்​க​சாமி தலை​மை​யில் நடை​பெற்ற விழா​வில்,​​ பூங்​க​ணம் ஊராட்​சித் தலை​வர் கிருஷ்​ண​மூர்த்தி,​​ உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர் அறி​வ​ழ​கன் முன்​னிலை வகித்​த​னர்.​  தே​சிய அறக்​கட்​ட​ளை​யின் மாவட்ட பிர​தி​நிதி ஓயா​சீஸ் செய​லர் டாக்​டர் தவ​ராஜ்,​​ திட்​டத்தை செயல்​ப​டுத்​தும் ஐஇ​பிசி செய​லர் முரு​கா​னந்​தம் ஆகி​யோர் விழிப்​பு​ணர்வு சார்ந்த ஆலோ​ச​னை​க​ளை​யும்,​​ இல​வச மருத்​து​வக் காப்​பீட்டு அடை​யாள அட்​டை​யை​யும் வழங்கி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior