உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

ஆதர​வற்​றோ​ருக்கு உதவி

 நெய்வேலி:​ 
 
                      வட​லூர் ஆர்​சீஸ் தொண்டு நிறு​வ​னம் சார்​பில் ஏழை மாண​வர்​கள்,​​ பெற்​றோரை இழந்​த​வர்​கள்,​​ உடல் ஊன​முற்​றோர்,​​ முதி​யோர் உள்​பட சுமார் 600 பேருக்கு கிறிஸ்​து​மஸ்,​​ புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் விழாவை முன்​னிட்டு புத்​தாடை மற்​றும் இதர உத​வி​கள் வியா​ழக்​கி​ழமை வழங்​கப்​பட்​டன.​  ÷வி​ழா​வுக்கு ஆர்​சீஸ் தொண்டு நிறு​வ​னத் தலை​வர் அன்​ப​ர​சன் தலைமை வகித்​தார்.​  விழா​வில் வட​லூர் ​ வெங்​க​டங்​குப்​பம் அரசு துவக்​கப் பள்​ளி​யில் பயி​லும் 65 ஆதி​தி​ரா​விட பழங்​கு​டி​யின மாண​வர்​க​ளுக்​கும்,​​ நரிக்​கு​ற​வர் காலனி பள்​ளி​யில் பயி​லும் 40 மாண​வர்​க​ளுக்​கும்,​​ வட​லூர் ஆர்.சி.​ பள்​ளி​யில் பயி​லும் ஆத​ர​வற்ற மாண​வர்​க​ளுக்​கும் புத்​தாடை வழங்​கப்​பட்​டது.​  
 
                அ​ரிமா சங்க மாவட்ட கவர்​னர் ரத்​தி​ன​ச​பா​பதி,​​ துணை கவர்​னர் கல்​யாண்​கு​மார்,​​ இந்​தி​யன் வங்கி முது​நிலை மேலா​ளர் சீனு​வா​சன்,​​ சந்​தி​ர​காசு,​​ ஞான​சே​கர் ஆகி​யோர் கலந்​து​கொண்​ட​னர்.​  விழா ஏற்​பா​டு​களை தொண்டு நிறு​வன துணைத் தலை​வர் ஆரோக்​கி​ய​தாஸ்,​​ செய​லர் ஏசு​தாஸ் உள்​ளிட்​டோர் செய்​தி​ருந்​த​னர்.​ ​ 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior