உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

மீனவர்களுக்கிடையே மோதல் பரங்கிப்பேட்டையில் பதட்டம்

பரங்கிப்பேட்டை :

                          பரங்கிப்பேட்டை அருகே மீனவர் களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அடுத்த புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சின்னபட்டினம், பெரியபட்டினம் என இரு பிரிவினர் உள்ளனர். சின்னபட்டனத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கிராம தலைவராக இருந்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன் நடந்த தலைவர் தேர்வின் போது தங்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக இருக்க வேண்டும் என பெரியபட்டினத்தை சேர்ந்தவர்கள் கூறினர். இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு பிரிவினரும் தனித்தனியே தலைவரை தேர்வு செய்தனர்.

                         இந்நிலையில் நேற்று இரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் அன்னப் பன்பேட்டையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளை யாடினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சின்னபட்டினம் பிரிவில் குட்டியாண்டி தலைமையிலும், பெரியபட்டினம் பிரிவில் நமச் சிவாயம் தலைமையிலும் இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த நமச்சிவாயம் கோஷ்டியைச் சேர்ந்த மணிவண் ணன் (40), கந்தன் (28), சக்திவேல் (35) பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இருபிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலைத் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் பரங் கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior