உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

பி.ஆர்.ஓ., அலுவலக ஊழியர்கள் இடமாறுதல் உத்தரவால் கலக்கம்



கடலூர் :

                          கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொடரும் அதிரடி இடமாற்றல் உத்தரவால் ஊழியர்கள் கலக்கமடைந் துள்ளனர். கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒன்னரை ஆண்டு பி.ஆர். ஓ.,வாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது முதல்வர் நிவாரண நிதி மற்றும் அண்ணாதுரை நூற் றாண்டு விழாவில் மோசடி என அடுக்கடுக்கான புகாரின் காரணமாக அலுவலக பணியாளர்கள் அனை வரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

                           அதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி நெடுமாறன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராமசாமி தேனி மாவட்டத்திற்கும், டிரைவர் முருகன் கோவை மாவட்டத் திற்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில் போட்டோகிராபர் ஈஸ் வரன் தர்மபுரி மாவட் டத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் மாற்றப்படுவர் எனக் கூறப்படுவதால், மாறு தல் உத்தரவு வராதவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior