உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

கடலூ​ரில் கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டம்

கடலூர்​: 

                     கடலூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை கிறிஸ்​து​மஸ் பண்​டிகை கோலா​க​ல​மா​கக் கொண்​டா​டப்​பட்​டது.​  கிறிஸ்​த​வர்​கள் புத்​தாடை அணிந்து தேவா​ல​யங்​க​ளுக்​குச் சென்று வழி​பட்​ட​னர்.​ தேவா​ல​யங்​கள் சிறப்​பாக அலங்​க​ரிக்​கப்​பட்டு இருந்​தன.​  

                  சில ஆல​யங்​க​ளில் வியா​ழக்​கி​ழமை நள்​ளி​ரவு 12 மணிக்​கும்,​​ பல ஆல​யங்​க​ளில் வெள்​ளிக்​கி​ழமை அதி​காலை 5 மணிக்​கும் சிறப்பு ஆரா​த​னை​கள் நடை​பெற்​றன.​  க​ட​லூர் மஞ்​சக்​குப்​பம் மைதா​னத்​தில் உள்ள புனித கார்​மேல் அன்னை ஆல​யத்​தில் வியா​ழக்​கி​ழமை நள்​ளி​ரவு 12 மணிக்கு கிறிஸ்​து​மஸ் ஆரா​தனை சிறப்​பாக நடை​பெற்​றது.​  குழந்தை யேசுவை வர​வேற்று பாடல்​கள் பாடப்​பட்​டன.​ பங்​குத் தந்தை அல்​போன்ஸ் சந்​தா​னம் அடி​கள் தலை​மை​யில் சிறப்பு பிரார்த்​தனை நடந்​தது.​  

                 தி​ருப்​பாப்பு​லி​யூர் கம்​மி​யம்​பேட்டை புனித சூசை​யப்​பர் ஆல​யத்​தில் பங்​குத்​தந்தை ஆரோக்​கி​ய​நா​தன் தலை​மை​யில் கிறிஸ்​து​மஸ் சிறப்பு ஆரா​தனை நடந்​தது.​  க​ட​லூர் புனித வள​னார் கல்​லூ​ரிச் சாலை​யில் உள்ள தூய எப்​பி​பெனி ஆலயம்,​​ பழைய மருத்​து​வ​ம​னைச் சாலை​யில் உள்ள தூய​யோ​வான் ஆலயம்,​​ பாரதி சாலை​யில் உள்ள ஏ.எல்.சி.​ ஆல​யம்,​​ செம்ண்​ட​லம் டி.இ.எல்.சி.​ பாவ​நா​சர் ஆலயம் சொரக்​கல்​பட்டு ஏழாம் நாள் அட்​வென்ட் ஆல​யம்,​​ முது​ந​கர் புனித சவே​ரி​யார் ஆல​யம் உள்​ளிட்ட பல்​வேறு ஆலயங்​க​ளி​லும் சிறப்​புப் பிரார்த்​த​னை​கள் நடந்​தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior