உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

.மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம்

கடலூர்:

                         மது விலக்கு வழக்கு வாகனங்கள் வரும் 30ம் தேதி கடலூரில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து கூடுதல் எஸ்.பி., சக்திவேல் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:


கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 44 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனங்கள் மூன்று என மொத்தம் 48 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

                          இந்த வாகனங்களை இன்று முதல் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் 30ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். வாகனத்திற்கு உரிமையாளர் இருக்கும்பட்சத்தில் ஏலத் தொகையுடன் 12.5 சதவீதம் விற்பனை வரி செலுத்த வேண்டும். உரிமையாளர் இல்லாதபட்சத் தில் 4 சதவீதம் விற்பனை வரி செலுத்த வேண்டும்.ஏலம் கேட்க விரும்புவோர் இரு சக்கர வாகனத்திற்கு 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும் முன்பணமாக 30ம் தேதி காலை 8.30 மணிக்குள் மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யிடம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior