உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

பண்ருட்டியில் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இறகுபந்து உள் விளையாட்டரங்கம் பூட்டிக் கிடக்குது

பண்ருட்டி : 

                பண்ருட்டியில் 27 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டரங்கம் திறப்பு விழா காணாமல் உள்ளது. பண்ருட்டி திருநகரில் கடந்த 2007-08ம் ஆண்டு எம்.எல்.ஏ. நிதியில் 11 லட்சம் செலவில் இறகு பந்து உள்விளையாட்டரங்கம் கட்டும் பணி துவங்கியது. இப்பணிக்கு கூடுதல் நிதியாக நமக்கு நாமே திட் டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு 1.50 லட்சம் உதவியுடன் 6 லட்சம் ரூபாய் செலவுடன் மொத்தம் 17 லட்சத்தில் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது.

                  இந்த அரங்கில் மரத்திலான ஆடுதளம் அமைக்காததால் விளையாட்டு வீரர்களின் கால்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மரத்திலான ஆடுதளம் அமைக்க வேண்டும் என இறகு பந்து விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் எம்.எல்.ஏ., வேல்முருகன் விடுத்த கோரிக்கையை ஏற்று மரத்திலான ஆடுதளம் அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக துணை முதல்வர் உத்தரவிட் டார். அதனைத் தொடர்ந்து சென்னை பி.எஸ்.எஸ். கன்ஸ்ட் ரக்ஷன் நிறுவனம் கீழ்தளம் அமைக்கும் பணியை கடந்த டிசம்பர் 25ம் தேதி முடித்தது. முழுமையான இறகு பந்து உள்விளையாட்டரங்கம் அமைத்து  ஒரு மாதத்திற்கு மேலாகியும், திறப்பு விழா காணாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள இறகு பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பழகுனர்கள் பயிற்சி மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள இறகுபந்து உள்விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior