உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

ஆசிரியருக்கு அண்ணாதுரை விருது நுகர்வோர் பேரவை பாராட்டு

புவனகிரி : 

                பள்ளி குழந்தைகளின் உயிரை காப் பாற்ற தன் உயிரை இழந்த ஆசிரியை சுகந்திக்கு அண்ணாதுரை விருது வழங்கிய முதல்வருக்கு புவனகிரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகர் ஆகியார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                        நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் குளத்தில் விழ்ந்தது. அதில் 11 மாணவர்களை காப்பாறி, 12வது மாணவரை காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் சுகந்தி இறந்தார். அவருக்கு அண்ணாதுரை விருது வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர் சுகந்திக்கு வரும் ஆண்டில் கல்பனா சால்வா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior