உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

என்.எல்.சி., மருத்துவமனையில் இன்று கண் சிகிச்சை முகாம்

நெய்வேலி : 

                என்.எல்.சி., பொது மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது. நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் என்.எல்.சி., பொது மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாமை நடத்துகிறது. நெய்வேலி மருத்துவமனையில் இன்று நடைபெறும் முகாமை என்.எல்.சி., சேர்மன் அன்சாரி துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுரங்கத்துறை சுரேந்தர் மோகன், செயலாக்கத்துறை கந்தசாமி, நிதித்துறை சேகர், நிர்வாகத்துறை பாபுராவ், மின்துறை சேதுராமன், விஜிலென்ஸ் துறை முதன்மை அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலை வகிக்கின்றனர். முகாம் ஏற்பாடுகளை என்.எல்.சி., மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior