உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

பெண்களுக்கு வேலைவாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி

கடலூர் : 

                   கடலூர் ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் ரோட்டரி சங் கங்கள் சார்பில் செல்வி செயல் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான 3 நாள் வேலை வாய்ப்பு சுய தொழில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. நி கழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். வக் கீல் அருணாசலம் முன் னிலை வகித்தார். ரோட் டரி உதவி ஆளுனர் தாயுமானவர் மற்றும் மண்டல செயலாளர் டாக்டர் மனோகரன், சங்க தலைவர்கள் டாக்டர் கோவிந்தராஜன், சத்தியநாராயணன், புனிதா கலந்து கொண்டனர்.பயிற்சியில் கம்ப்யூட்டர் சாம்பிராணி, பட்டுப்புடவை பாலிஷ் செய்தல், சந்தன வில்லை தயாரித்தல் உள்ளிட்ட 10 தொழில் முறை பயிற்சி அளிக்கப்பட்டது. 

                          இப்பயிற்சியில் 100 பெண்கள் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை "யுனிவர்ஸ் மல்டிபர்பஸ்' பயிற்சி நிலையத்தினர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior