உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

மீனவர்களுக்குள் மோதல் 4 பேர் காயம்: 6 பேர் கைது

கடலூர் :

                      மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ராமசாமி, கந்தசாமி. இவர் களுக்குள் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமசாமி மகன் மகாலிங்கத்தை, கந்தசாமி மற்றும் அவரது மகன்களும் சேர்ந்து தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய மகாலிங்கம் தனது சகோதரர்களுடன் திரும்பி வந்து கந்தசாமி மற்றும் அவரது மகன்கள் மூவரையும் வீடு புகுந்து தாக்கினர். அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் கந்தசாமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து ராமசாமி மகன்கள் மகாலிங்கம் (26), ஆறுமுகம் (23), சுகுமார் (28), அண்ணாமலை (34) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior