உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

கும்பகோணம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிதம்பரத்தில் சரண்


சிதம்பரம் : 

                            கும்பகோணம் மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டவர், சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கும்பகோணம் அருகே உள்ள மேல்கொர்க்கை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் கொலை வழக்கில் தன்னை போலீஸ் தேடுவதாக கும்பகோணம் பட்டீஸ்வரம், சுவாமிமலை மெயின் ரோட்டை சேர்ந்த ரவிசங்கர் (38) என்பவர் சிதம்பரம் மாஜிஸ்திரேட் (2) கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.அவரை 15நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஈஸ் வரமூர்த்தி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior