உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருட்டு

கடலூர் :

                 பஸ்சில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாதோப்பு அடுத்த பெரியக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் உள்ள நகை கடையில் ஐந்து சவரன் காசு மாலையை வாங்கிக் கொண்டு தனியார் பஸ்சில் வீடு திரும்பினார். சேத்தியாதோப்பிற்கு சென்று பார்த்தபோது லெதர் பேக்கில் வைத்திருந்த காசு மாலையை காணவில்லை. அதன் மதிப்பு 74,000 ரூபாய். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலிசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior