உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

மாமுல் தர மறுப்பு: கடை சூறையாடல்


கடலூர் :

               மாமுல் தர மறுத்த கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சீனு, குமார் மகன் வினோத் ஆகியோர் செல்வமணியின் கடைக்கு சென்று மாமூல் 50 ரூபாயும், ரீசார்ஜ் கார்டு கேட்டனர். செல்வமணி மறுக் கவே ஆத்திரமடைந்த சீனு,வினோத் இருவரும் செல்வமணியை தாக்கினர். மேலும், கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வரவே இருவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior