உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

பண்ருட்டி அருகே பீரோவை உடைத்து 9 சவரன் நகை திருட்டு


பண்ருட்டி: 

                      பண்ருட்டி அருகே வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 9 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த மேல்காவனூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(30). இவரது தம்பி சிவகுரு(27). நேற்று முன்தினம் காலை சிவகுருவும், குடும்பத்தினர்களும் நிலத்திற்கு களையெடுக்க சென்றிருந்தனர். வீட்டில் ஜெய்சங்கரை பாதுகாப்புக்கு விட்டு சென்றனர்.

                      ஜெய்சங்கர் கரும்பு தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து  பீரோவை உடைத்து  அதிலிருந்த தாலி சரடு,  நெக்ல்ஸ், டாலர் ஜெயின் உள்ளிட்ட 9 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். இது குறித்து சிவகுரு புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  தடய அறிவியல் நிபுணர்கள்  தடயங்களை சேகரித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior