உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

கனரா வங்கி ஊழியர் சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


நெய்வேலி: 

                        நெய்வேலியில் கனரா வங்கி ஊழியர் சங்க மாநில குழு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கனரா வங்கி ஊழியர் சங்க தமிழ் மாநிலக் குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தாய் தொண்டு மைய குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பல் வேறு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேர்பெரியான் குப்பத்தில் ஊராட்சி தலைவர் முன்னிலையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் மாநிலக்குழு உதவித் லைவர் ஜோசப் இளங்கோவன், கனரா வங்கி அதிகாரிகள் சங்க திருச்சி வட்ட தலைவர் மதுரகவி, மாநில குழு உறுப்பினர் கன்யூட், வேணுகோபால், சுப்ரமணியன் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior