உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

சாலையோர வியாபாரிகள் பண்ருட்டியில் உண்ணாவிரதம்

பண்ருட்டி: 

                    சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் பண் ருட்டி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. ஆக்கிரமிப்பு அகற்றத் தில் பாதித்துள்ள சாலையோர சிறு வியாபாரிகள் பிரச்னையில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி பண்ருட்டி ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில்  நேற்று பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

                    சங்க பொருளாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரகுபதி, மணி, ராமானுஜம் முன்னிலை வகித் தனர்.  மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ் ணன், மாவட்ட குழு பாஸ்கர், முத்துகுமார், கவுரவ தலைவர் சக்திவேல், ஏஜடியுசி மாவட்ட துணை செயலாளர் துரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாலை உண்ணாவிரதத்தை இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் முடித்து வைத்து பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior