உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி தொடக்கவிழா


சிதம்பரம்:
 
            சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தாட்கோ நிறுவனம் மூலம் 250 மாணவ. மாணவிகளுக்கு சிதம்பரம் ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் இன்ஸ்டியூட் நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர்  100 பேருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சியை தாட்கோ மாவட்ட மேலாளர் இல.துளசிதரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை ஆட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ஜா.து.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் எம்.ராமசாமி, ஆங்கிலப் பயிற்சி நிறுவனத் தலைவர் சோ.ஆறுமுகம்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior