உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

விவசாய தொழிலாளர் சங்கம் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம்: 

                சிதம்பரம் அருகே  பட்டா வழங்காததைக் கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  சிதம்பரம் அருகே கீழ்நத்தத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், இலவச மனை பட்டா கேட்டு  அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இலவச மனை பட்டா வழங்க  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நில ஆர்ஜிதம் செய்து, இது நாள் வரை பட்டா வழங்கவில்லை என கோரி   விவசாய தொழிலாளர்கள்  விரைவில் மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

                            வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம், சபாநாயகம் முன்னிலை வகித்தனர்.  (சி.பி. ஐ.,) மாவட்ட செயலாளர் மணிவாசகம் பட்டா வழங்க மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில்  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், காசிலிங்கம், பூபாலன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior