உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை: இருவருக்கு வலை

கடலூர்: 

                மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபரை அடுத்து குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (37). அதே ஊர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22), குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக காயல்பட்டில் வசித்து வருகின்றார். நேற்று அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக மணிகண்டன், சஞ்சீவி இருவரும் பிரபுவை அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித் தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட் டுள்ளது. பின்னர் மீன் பிடிப்பதற்கு வலையை யாவது கொடு என கேட்டும், பிரபு மறுத்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சஞ்சீவி இருவரும் சேர்ந்து பிரபுவை தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் உள்ள குளத்திற்கு இழுத்துச் சென்று தண்ணீரில் முழ்கடித்தனர். இதை பிரபுவின் தம்பி தணிகாசலத்தின் மகன் ரியாஸ் பார்த்து கூச்சலிட்டதும் இருவரும் தப்பியோடி விட்டனர். பின் ஊரில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது பிரபு தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சஞ்சீவி ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior