உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

மளிகை கடைகளில் சுகாதார துறையினர் சோதனை

கடலூர்:

              மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருள் விற்கப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வடலூர் பேரூராட்சி பகுதியிலும், கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் புவனகிரி பகுதியிலும், சுகாதார மேற்பார்வையாளர் ராமதாஸ் தலைமையில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளிலும்,  காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மலர்விழி தலைமையிலான குழுவினர் அங்குசெட்டிப்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் பகுதிகளிலும், ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவொளி தலைமையிலான குழுவினர் புதுப் பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 
 
                         அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள துவரை, கடலை, உளுந்து, கேசரி பருப்பு உள்ளிட்டவைகளில் கலப்படம் உள்ளதா என சோதனை செய்தனர். சில கடைகளில் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களை அறிவுறுத் தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior