உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி உற்சவம்

கடலூர்:

                      கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாக்களில் முதன்மையும், பெருமையும் கொண் டது மகா சிவராத்திரி விழா. பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கமேனி கொண்ட காலமே மகா சிவராத்திரி என்றும், அன்று இரவு நான்கு ஜாமத் திலும் சிவபெருமானை உமா தேவி வழிபட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.சிவராத்திரி என்பது துக் கங்களை போக்கி சுகம் கொடுப்பதாகும். அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை இந்து அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஜெகன் னாதன், செயல் அலுவலர் மேனகா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர். 
 
திருவதிகை:

                    வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று (13ம்தேதி) காலை 6 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சரக் கொன்றைநாதர் சுவாமிக்கு பஞ்ச தீர்த்தங்களால் பக்தர் களே நேரடியாக அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய் யப்பட் டுள்ளது. மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சுவாமிக்கு இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11மணிக்கு 2ம் கால பூஜையும், 2 மணிக்கு 3ம் கால பூஜையும், 4மணிக்கு 4ம் கால பூஜையும், நாளை விடியற்காலை தீபாராதனை நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior