உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

ஊனமுற்றோருக்கு கடன் வழங்க ஆலோசனை முகாம்


சிதம்பரம்: 

         சிதம்பரத்தில் ஊனமுற்றோர்க்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான முகாம்  நடத்தப்பட்டது.
 
                     தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாக ஊனமுற்ற நபர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் அலுவலகம் மூலம் சிதம்பரத்தில் முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி தலைமை தாங்கினார். மாவட்ட ஊனமுற்றோர் நல அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மத்திய வங்கி உதவி பொதுமேலாளர் மோகன் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசி விண்ணப் பங்களை வழங்கினார். துணைப்பதிவாளர் இளஞ்செழியன், மேலாளர் சீனுவாசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior