உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

என்.எல்.சி., சுரங்கத்தில் திருட முயற்சி துப்பாக்கி சூடு; பொருட்கள் தப்பியது


நெய்வேலி: 

                     என்.எல்.சி., சுரங்க வளாகத்தில் திருட முயன்ற கும்பலிடமிருந்து, துப்பாக்கி சூடு நடத்தி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டது. நெய்வேலி - வடலூருக்கு இடையே உள்ள பெரியாகுறிச்சி வீரன் கோவிலின் பின்புறம் வழியாக என்.எல்.சி., முதல் சுரங்கத்திற்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் இறங்கிய 20க்கும் மேற்பட்ட கும்பல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு தப்பிக்க முயன்றனர்.

                      அதை பார்த்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தேவதாஸ், பொருட்களை கீழே போடுமாறு எச்சரித்தார். அந்த கும்பல் தேவதாசை கத்தியால் வெட்ட முயன்றது. சுதாரித்துக் கொண்ட தேவதாஸ், தான் வைத்திருந்த "இன்சாப்' வகை துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். திருடிய பொருட்களை போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். தகவலறிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். திருட முயற்சி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior