உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி


சிதம்பரம்: 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விடிய, விடிய பூஜைகள் நடக்கிறது.பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை கால பூஜைகள் முடிந்து பிறகு மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது.அதே போல் சிவதொண் டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவஜோதி எடுத்து காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மகா சிவாலய தரிசனமும் நடக் கிறது.

                    நடராஜர் கோவிலில் இருந்து தரிசனத்தை துவக்கி நடைபயணமாக ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், கமலீஸ்வரன் கோவில், உமாபதி சிவமடம், சிவபுரி, திருக்கழிப்பாலை, உசுப்பூர், புலிமேடு, அக்னி லிங்கம், இமய லிங்கம், நிருதி லிங்கம், இளமையாக்கினார் கோவில், அழகேஸ்வரர் கோவில், நந்தனார் கோவில், துர்வாசர் மடம், அனந்தீஸ்வரர் கோவில், பிரம்பராயர் கோவில், சிங்காரத்தோப்பு, அவதூதசுவாமிகள் அரிஷ் டானம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மாணிக்கவாசகர் மடம் ஆகியவற்றை தரிசத்துவிட்டு குருநமச்சிவாயர் கோவிலில் சிவாலய தரிசனத்தை முடிக்கின்றனர். சிதம்பம் சைவ திருச்சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior