உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நல்லூர் ஒன்றிய சேர்மன் ஆறுதல்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலத்தில் கடந்த 27ம் தேதி சிறுபாக்கத்தில் இருந்து வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். காயமடைந்த 31 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் விருத்தாசாலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள். விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா நேற்று சந் தித்து ஆறுதல் கூறி பிரட், பிஸ்கட் வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாவாடைகோவிந்தசாமி, துணை தலைவர் கருப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் சக்திவினாயகம், வெங்கடாசலம், சீனுவாசன், மோகன்ராஜ், ஜெய்சங்கர் உடனிருந்தனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior