உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

அண்ணாமலை பல்கலையில் இன்ஜி., வகுப்புகள் துவங்கியது

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், காலவரையற்ற விடுமுறை விடப் பட்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரியில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாண வர் கவுதம்குமார், கடந்த மாதம் 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் தண்ணீரில் மூழ்கி சுமித் குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் இறந்தனர். இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.கடந்த 11ம் தேதி எம்.ஏ., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., - எம்.எட்., இசைக் கல்லூரி, விவசாய கல் லூரி, பார்மசி, இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்பட்டன. இன்ஜினியரிங் முதலாண்டு வகுப்புகள் 17ம் தேதி துவக்கப்பட்டது. இன்ஜினியரிங் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior