உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு பாராட்டு

சிதம்பரம் : 
 
                   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது. 
 
தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், 
 
                  மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை எந்த அரசு ஊழியர் சங்கங்களும் கோரிக்கை வைக் காத நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்டதுடன், ஜனவரி 2010 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். சிவஇளங்கோ அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக் கையில், மத்திய அரசு அறிவித்தது போல் மாநிலத்தில் 1-1-2010 முதல் 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி ரொக்கமாக வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக் கும் என கூறியுள்ளார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior