உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூர் : 

                 பண்ருட்டியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி இரண்டாவது முறையாக தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாபு என்கிற புண்டேரிபாபு(40) அப்பகுதியில் சாராயம் விற்று வந்ததால் கடந்த ஜனவரி மாதம் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதத்தில் வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பாபு மீண்டும் சாராயம் விற்று வந்தார்.  இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிந்துரையை ஏற்று கலெக்டர் சீத்தாராமன் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பண்ருட்டி போலீசார், பாபுவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior