உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

தீயில் கருகி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணை

நடுவீரப்பட்டு : 

               தீயில் கருகி இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூர் அடுத்த திருமானிக்குழியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற தென்கோவன். இவரது மனைவி பரிமளா என்கிற விஜயலட்சுமி (20). திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த 14ம் தேதி பரிமளா தனது வீட்டில் சுவற்றின் மீது இருந்த பூ பொட்டலத்தை எடுக்க முயன்ற போது, சுவற்றில் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி பரிமளா மீது விழுந்ததில் உடல் முழுவதும் தீ பரவியது. அதில் படுகாயமடைந்த பரிமளாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பரிந்துரை செய்ததன் பேரில் கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ், வரதட்சணை கொடுமையினால் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior