உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

பண்ருட்டி உழவர் சந்தை செயல்பாடு ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டம்

 பண்ருட்டி: 

           உழவர் சந்தை செயல் பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் நடந்தது.
 
                   ஆர்.டி.ஓ.செல்வராஜ் தலைமை தாங்கினார். சேர்மன் பச்சையப்பன், தாசில்தார் பாபு, இன்ஸ் பெக்டர் செல்வம், கமிஷனர் உமா மகேஸ்வரி, தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம்,வேளாண் துணை அலுவலர் ரவி சேகர், போக்குவரத்து இன்ஸ் பெக்டர் தணிகாசலம், வட்டார வேளாண் இயக்குனர் தனவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் சுதாகரன், பண்ருட்டி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அய்யாசாமி, காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, செயலாளர் சேகர், ராஜேந்திரன், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் 1ம்தேதி முதல் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விற்பனை செய்யும் விவசாய விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் ஒத்துழைப்பது. அனைத்து அரசு டவுன் பஸ்களும் உழவர் சந்தை வழியாக இயக்குவது. சாலைகளில் கொய்யா, பலா, காய்கறி ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்யும் விவசாய பொருட்கள் உழவர்சந்தை மூலம் விற்க நடவடிக்கை மேற்கொள்வது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior