உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்


கடலூர்: 

               மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
 
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

                          இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். 

          மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண்ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior