உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கடலூர்: 

                    பணி நிரந்தரம் கோரி கடலூர் மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

                      கடலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் நடந்த போராட்டத்தில் அமைப்பாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் நாகராஜ், நிர்வாகிகள் சந்திரபாலன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். 

திட்டக்குடி: 

                    மாவட்ட செயற்குழு உறுப்பினர் கொளஞ்சி தலைமையில் பொருளாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் எஸ்.ஆர்.எம்., ராபின்சன், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாற்று சுமை தூக்கும் பணியாளர்களை அழைத்து போலீசார் உதவியுடன் பணிகளை மேற்கொண்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior