உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

புத்தக தின கண்காட்சி

பண்ருட்டி:

                 உலக புத்தக தினத்தை முன்னிட்டு பண்ருட்டி கிளை நூலகத்தில் வெள்ளிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தினம் ஒரு திருக்குறள் பலகையை திறந்து வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.  வாசகர் வட்ட தலைவர் தமிழாசிரியர் ஏ.ஏழுமலை திருக்குறள் எழுதும் பலகையை நன்கொடையாக வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், ஆணையர் கே.உமாமகேஸ்வரி ஆகியோர் புரவலராக இணைந்தனர். நூலகர் வெ.செல்வராஜ் மற்றும் நூலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூலகர் மு.செல்வம் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior