உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

டில்லியில் உள்ளாட்சி விழா ஊராட்சி தலைவர் பங்கேற்பு


புவனகிரி:

            டில்லியில் நடக்கும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் பங் கேற்கிறார்.
 
                  கீரப்பாளையம் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராஜன். ஒருங்கிணைந்த முழு ஊரக சுகாதார திட்டத்தை நன்கு செயல்படுத்தியதற் காக கடந்த 2007ம் ஆண்டு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது கிடைத்தது. அதனைத்தொடர்ந்து ஒரத் தூர் ஊராட்சியில் செலவினங்களை குறைத்து வருவாய் பெருக்கம் செய்தமைக்ககாகவும், பதிவேடுகள் மற்றும் கணக்குகள் சரியாக பராமரித்தமைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நன்கு செயல்படுத்தியமைக்காகவும் மாவட்ட நிர்வாகம் ஒரத்தூர் ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்தனர். அதனையொட்டி திட்ட அலுவலர் ராஜஸ்ரீ பரிந்துரையின் பேரில் கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் டில்லியில் இன்று (24ந் தேதி) நடைபெறும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஊராட்சி தலைவர் செல்வராஜன் பங்கேற்கிறார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior