உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

உண்டியல் உடைப்பு ஆசாமிகளுக்கு வலை


பரங்கிப்பேட்டை: 

                 புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

                  சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட கடைகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுவரை நான்கு இடங்களில் பூட்டிய கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அமைந்துள்ள ரேணுகாம்பாள் கோவிலில் மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து 5 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். கோவில் அருகே உள்ள சக்கரவர்த்தி என்பவரின் ஓட்டல் கடையை உடைக்க முடியாமல் சென்று விட்டனர். போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிலில் உண்டியல் உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior