உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

ஐவதுகுடி ரேஷன் கடை சேல்ஸ்மேன் 'சஸ்பெண்ட்'


திட்டக்குடி: 

                   வேப்பூர் அருகே ரேஷன் கடையில் 'பில்' வழங்கி பொருட்கள் வழங்காத 'சேல்ஸ்மேன்' 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேப்பூர் அடுத்த ஐவதுகுடி ரேஷன் கடை 'சேல்ஸ்மேன்' பன்னீர்செல்வம். இவர் ரேஷன் கார்டுகளுக்கான பொருட்களை வழங்காமல் 'பில்' மட்டும் கொடுத்து மக்களை அலைகழித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், வட்ட வழங்கல் அலுவலர் செழியன், தனி வருவாய் ஆய்வாளர் நசீர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அதில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது. மேலும் 'பில்' வழங்கி பொருட்கள் வழங்காதது தெரியவந்தது. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் 'ஸ்பாட் சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior