உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ஜெனரேட்டர்கள்

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாமல் இருக்க 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.

              நெல்லிக்குப்பம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி வளாகம், ஆலை ரோடு ஆகிய இரண்டு இடங்களில் பிரதான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் காலை, மாலை இரு வேளைகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் கிணறு, ஆழ்துளை கிணறு பயன்பாட்டை மக்கள் மறந்தனர். கடந்த சில மாதங்களாக மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் குடிநீர் சப்ளை தொடர்ந்து வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க முடிவு செய்தனர். ஒவ்வொரு இடத்துக் கும் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. இனி மின் சப்ளை இல்லா விட்டாலும் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை சீராக இருக்கும்.

பொது அறிவிற்கு:
பெரிய பாதை கொண்ட கிரகம்  - புளுட்டோ

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior