உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் காரீப் முன் பருவ பயிற்சி

குறிஞ்சிப்பாடி :

            குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காரீப் முன் பருவ பயிற்சி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

              குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் கோடையுழவு, மண் மாதிரியின் அவசியம், விதை நேர்த்தி, எலி ஒழிப்பு, செம்மை நெல் சாகுபடி குறித்து காரீப் முன் பருவ பயிற்சி முகாம் கடந்த 26ம் தேதி தொடங்கி வரும் மே 13ம் தேதி வரை அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாலை 4 மணிக்கு வேளாண்மை துறை அலுவலர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

               இந்த பயிற்சி முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதுடன் தங்கள் நிலத்தின் மண் சத்துக்களை அறிந்து கொள்ள மண் மாதிரி எடுத்து வந்து ஆய்வு செய்து இதன் அடிப்படையில் நிலத்துக்கு தேவையான உரங்களை இட்டு அதிக விளைச்சலை பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒரு மண்மாதிரி ஆய்வு செய்ய 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொது அறிவிற்கு:
சூரிய மண்டலத்தின் சிறிய கிரகம் - புளுட்டோ

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior