உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

பி.எஸ்.என்.எல்.அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:
 
               பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்கத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
                 அதிகாரிகளுக்கு முறையற்ற மாறுதல்கள் அளித்ததைக் கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
 
பொது அறிவிற்கு:  

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior