உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் நடத்திய புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம்

கிள்ளை : 

              சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் சார்பில் புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

               சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில் சிதம் பரம் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கத்தின் மூலம் நடந்த புவி வெப்பம் அடைதல் குறித்த கருத்தரங்கில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்றார். இயக்கத் தலைவர் குபேரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர்களை தடுக்கும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, அக்னி சிறகுகள் எழுச்சி இயக்கத்தினர்கள் மணிமாறன், மணிகண்டன், சுப்ரமணியசிவா, விஜயராஜ், வேம்பரசி, யவனராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை குணவதி, பபிதா உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர். கவிதா நன்றி கூறினார். முகாமில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பொது அறிவிற்கு
மனிதன் நிலவில் இறங்கிய நாள் - ஜூலை 21, 1969


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior